மானூர் அருகே தெற்கு வாகைகுளம் ஆனைமலை அய்யனார் சாஸ்தா கோயிலில் வருஷாபிஷேகம்

விகேபுரம், ஜூன் 28: மானூர் அருகேயுள்ள அழகியபாண்டிபுரம் தெற்கு வாகைகுளம் குளக்கரையில் ஸ்ரீபூர்ணா, ஸ்ரீபுஷ்கலா சமேத ஸ்ரீஆனைமலை அய்யனார் சாஸ்தா கோயில் உள்ளது. இக்கோயிலில் 11வது வருஷாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமம், பூர்ணாகுதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாஸ்தாவை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை