மானாமதுரை அருகே வாலிபரை தாக்கி பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

மானாமதுரை, செப். 19: மானாமதுரை அருகே வாலிபரை தாக்கிவிட்டு அவருடன் இருந்த பெண்ணை மர்மநபர்கள் கடத்தி சென்றதாக புகார் தெரிவித்ததால் போலீசார் விசாரிக்கின்றனர். இளையான்குடி அருகே தாயமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பக்கத்து கிராமத்தை ேசர்ந்த 30 வயது பெண்ணுடன் புளியங்குளம் கண்மாய்க்கரை அருகே நேற்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு டூவீலரில் வந்த 7 மர்மநபர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரிடம் இருந்த பணம் செல்போனை பறித்து கொண்டு அந்த பெண்ணை தங்களுடன் வருமாறு மிரட்டல் விடுத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த வாலிபர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை உள்நோயாளியாக அனுமதித்த ேபாது அவர் கொடுத்த தகவலின்பேரில் சிப்காட் போலீசார் சம்பவம் நடந்தது உண்மையா? கடத்தப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதா? கடத்தப்பட்ட பெண் எங்கு உள்ளார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்