மாந்தோப்பில் பிடிபட்ட மலைப்பாம்பு

சிங்கம்புணரி, ஜூன் 7: சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு அருகே உள்ள மாந்தோப்பில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு சுற்றித் திரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் சென்றனர். அங்கு மலைப்பாம்பு மற்றும் சாரை பாம்புகள் இருப்பதை பார்த்தனர். உடனடியாக 10 அடி நீள மலைப் பாம்பையும், 8 நீளம் உள்ள சாரை பாம்பையும் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிரான்மலை வனப்பகுதியில் பாம்புகள் விடப்பட்டது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி