மாநில ஸ்கேட்டிங் போட்டி எஸ்டிஆர் பள்ளி மாணவி முதலிடம்

 

தூத்துக்குடி, ஜூலை 31: மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி எஸ்டிஆர் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடியில் சிஐஎஸ்இ மற்றும் எஸ்ஜிஎப்ஐ சார்பில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவியர் பிரிவில் தூத்துக்குடி எஸ்டிஆர்.பள்ளி 12ம் வகுப்பு மாணவி முத்து சுபாஷினி 300 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்து உள்ளார்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி முத்து சுபாஷினியை பள்ளி சேர்மன் எஸ்.டி.ஆர். விஜயசீலன் சார்பில் பள்ளி முதல்வர் மெரின் லூர்துராஜ், துணை முதல்வர்கள் லியோ ஷீலா, ஜெனிட்டா உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர். விளாத்திகுளம் தொகுதியை பசுமையாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்