மாநில ரோல்பால் ஸ்கேட்டிங் சிவகங்கை மாவட்ட அணி வெற்றி

காரைக்குடி, ஆக.1: திருச்சியில் நடந்த மாநில அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. திருச்சியில் மாநில அளவிலான 11வது ஜூனியர் ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது. இதில், மதுரை, சிவகங்கை, கோவை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 மாவட்ட அணிகள் விளையாடின. இதில் சிவகங்கை மாவட்ட அணி லீக் சுற்றுகளில் திண்டுக்கல், திருச்சி அணிகளை வீழ்த்தியது. கால் இறுதி போட்டியில் மதுரையை வென்றது.

அரை இறுதி போட்டியில் செங்கல்பட்டு அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் கோவை அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றது. சிவகங்கை மாவட்ட அணியில் விளையாடிய தீபேஷ், தருண், வெற்றிவேல், ஸ்ரீராம், கிஷோர், விஷ்வா, இளமாறன், பிரனேஷ், ஜஸ்வந்த், பெருமாள், ஆதித்யா, காஞ்சிரித்தீஷ், அபிஷேக் மற்றும் பயிற்சியாளர்கள் தபேந்திரன், பாலா, வைத்தீஸ்வரன், தயாளன் ஆகியோரை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை