மாநில யோகா போட்டி: மகாத்மா வித்யாலயா பள்ளி சாம்பியன்

திருவில்லிபுத்தூர், செப்.6: விருதுநகரில் உள்ள செந்தில்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

மாநில அளவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி விருதுநகரில் உள்ள செந்தில்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருவில்லிபுத்தூர் மகாத்மா பள்ளியிலிருந்து 73 மாணவர்கள் முதல் இடத்தையும், 48 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 20 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

மாணவ, மாணவியர் பெற்ற வெற்றியின் அடிப்படையில் மகாத்மா பள்ளிக்கு சாம்பியன் ஆப் சாம்பியன் பரிசு கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியில் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் முருகேசன், முதல்வர் ராணி முருகேசன் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர். விழாவில் யோகா பயிற்சியாளர் பேச்சி முத்துவிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை