Sunday, September 29, 2024
Home » மாநில மல்யுத்த போட்டி பழநி மாணவர்கள் வெற்றி

மாநில மல்யுத்த போட்டி பழநி மாணவர்கள் வெற்றி

by Ranjith

பழநி, நவ. 25: மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் பழநி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். திண்டுக்கல்லில் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள் 3 நாட்கள் நடந்தது. மல்யுத்த தென்னிந்திய மல்யுத்த சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் தலைமையில் போட்டிகள் நடந்தன. 12 வயதிற்குட்பட்டோர் மற்றும் 15 வயதிற்குட்பட்டோர் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் 12 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பழநி தீரா காம்பாட் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவர் தீசித்ராஜ் தங்கப்பதக்கம் பெற்றார்.

மாணவர்கள் சாருன், சஞ்சய்குமார், ஹர்ஷித், சரிகா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். மாணவர்கள் சிவசங்கர், சாம்கிஷால், பவிஷ்னா, தரனீஷ், தமிழினி ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். 15 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவர்கள் தினேஷ்குமார், தர்ஷினி ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். மாணவி ரன்யா வெள்ளிப் பதக்கம் பெற்றார். மாணவி சங்கமித்ரா வெண்கல பதக்கம் பெற்றார். மாணவர் நித்திஷ் தமிழ்நாடு அளவில் 4ம் இடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களை பயிற்சியாளர் முகமது அசாருதீன், டிஎஸ்பி சரவணன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

You may also like

Leave a Comment

4 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi