மாநில தடகள போட்டியில் சிவகாசி ஆர்எஸ்ஆர் பள்ளி மாணவர்கள் சாதனை

 

சிவகாசி, ஜூலை 17: திருத்தங்கலில் மாநில பள்ளிகள் அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசி ஆர்.எஸ்.ஆர். பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குண்டு எறிதல் போட்டியில் பிளஸ்-1 மாணவி ஹா மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.

9-ம் வகுப்பு மாணவி ஷாமலா குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார். சாதனை மாணவிகளை பள்ளியின் தலைவர் சண்முகையா, முதல்வர் முத்துலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்