மாநில சிலம்ப போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்

 

தேவகோட்டை, பிப்.6: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தேவகோட்டை கிளை அலுவலகத்தில் மாநில அளவிலான சில ம்ப ஒற்றைக்கம்பு சுழற்சி விளையாட்டு போட்டி நடந்தது. இதில் தங்கம் வென்ற மாணவர் அப்துல் பாசித் என்ற மாணவருக்கு பாராட்டி விழா நடைபெற்றது. தமுமுக நகர தலைவர் அன்சர் அலி தலைமையில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பிரதிநிதி மண்டல ஜெய்லாவுதீன், மாநில தொண்டரணி செயலாளர் ஃபர்கி, மாவட்ட செயலாளர் முத்தலிபு, பொருளாளர் முகமது அன்சாரி,நகர பொருளாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட வட்ட அளவில் நடைபெற்ற சிலம்பு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் பரிசு வழங்கினர்.

 

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்