Saturday, June 29, 2024
Home » மாநில சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மேலூர் மாணவர்கள்

மாநில சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற மேலூர் மாணவர்கள்

by kannappan

மேலூர்: மேலூர் பகுதி மாணவர்கள் மாநில சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் கோப்பையை வென்றனர். மதுரை பாத்திமா கல்லூரியில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட குழு சிலம்ப போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 குழுக்கள் சிலம்ப போட்டியில் போட்டியிட்டன. இதில் மேலூர் பகுதியில் உள்ள வஜ்ரம் சிலம்ப பள்ளி மாணவர்கள் 16 பேர் கலந்து கொண்டனர்.மாணவர்கள் திவ்யதர்ஷன், விஜய், சுரேந்தர், யோகந்த், மிதுன், ஸ்ரீதர், சாய கிருஷ்ணா, சாய் பிரணவ், மீனாட்சி பழனி, தென்பாண்டி, யோக சாஸ்தாஹரன், கோகுல், பரணி, ஆகாஷ், சுமிதா, ஹர்ஷிதா ஆகியோர் வெற்றி பெற்று பதக்கம், பரிசு கோப்பையை வென்றனர். சாதனை படைத்த மாணவர்களை தலைமை பயிற்சியாளர் ஜவஹர் பாண்டியன் மற்றும் பயிற்சியாளர் கார்த்திகேயன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்தி வரவேற்றனர்….

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi