மாநில கூடைப்பந்து போட்டிக்கு இன்று ஆட்கள் தேர்வு

சிவகங்கை, செப். 14: கூடைப்பந்து போட்டிக்கு மாநில அளவிலான இளையோர் பிரிவுக்கான ( 16 வயதுக்கு கீழ்) வீரர், வீராங்கணைகள் தேர்வு இன்று (செப்.14) நடக்க உள்ளது. தமிழ்நாடு கூடைப்பந்து கழக நிர்வாகிகள் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்க கூடைப்பந்து மைதானத்தில் மாநில அளவிலான இளையோர் பிரிவுக்கான (16 வயதுக்கு கீழ்) கூடைப்பந்து போட்டிக்கு வீரர், வீராங்கணைகள் தேர்வு இன்று மாலை 4.00 மணிக்கு நடக்க உள்ளது. 01.01.2008 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை, பள்ளியில் படிப்பதற்கான உறுதி அளிப்பு சான்று உள்ளிட்டவை கொண்டு வர வேண்டும். கூடுதல் விபரம் அறிய 9443175242, 6382864815 ஆகிய செல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்