மாநில எறிபந்து போட்டி: கரூர் மாவட்ட அணிக்கு அரவக்குறிச்சி அரசு கல்லூரி மாணவர் தேர்வு

கரூர், ஆக. 22: மாநில அளவிலான எறிபந்து போட்டியில் கரூர் மாவட்ட அணியில் கலந்து கொண்டு விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 19வயதுக்குட்பட்ட மாநில அளவிலான எறிபந்து போட்டியானது தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் நடைபெறவுள்ளது. போட்டியில் கரூர் மாவட்ட அணியுடன் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ தமிழ் முதலாமாண்டு பயிலும் மாணவர் கவியரசு தேர்வு பெற்றுள்ளார். மாவட்ட அணிக்கு தேர்வான மாணவரை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர் மற்றும் அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை