மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு

தர்மபுரி, பிப்.14: 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான குடியரசு தின விழா இறகுபந்து போட்டிகள் புதுக்கோட்டையில் நடந்தது. இதில், தமிழகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 14வயதுக்குட்பட்டோர் பிரிவில், தர்மபுரி குண்டலப்பட்டி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் லட்சுமணன் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவனுக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், மறை மாவட்ட பொருளாளர் சூசைராஜ், பள்ளி முதல்வர் செங்கோல் பேசில், உடற்கல்வி ஆசிரியர் அருண் பிரேம்குமார், மாணவனின் பெற்றோர் ரமேஷ், கவிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு

மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்