மாநகர் மாவட்ட காங். சார்பில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி

கோவை, செப். 8: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி கோவை கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நேற்று துவங்கியது. இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, ரேஸ்கோர்ஸ் சி.சுப்பிரமணியம் சிலையை அடைந்தது. மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசாமி தலைமை தாங்கி, இப்பேரணியை துவக்கிவைத்தார். மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், எச்.எம்.எஸ். தலைவர் ராஜாமணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், சரளா வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழ்செல்வன், இராம.நாகராஜ், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, தாமஸ் வர்க்கீஸ், ஜெரோம் ஜோசப், காந்தகுமார், குறிச்சி வசந்த், சுரேஷ், பழனிச்சாமி, காட்டூர் தனசேகரன், திலகவதி, ஜேம்ஸ்குமார், ராமன், வினோத், முருகன், அஸ்மத்துல்லா, பேரிங் பாபு, அம்மாஸ் அபு, சசிதரன், விக்னேஷ், சுதன், அனீஸ், துரைசாமி, தங்கம் பழனிச்சாமி, தேவராஜ், சந்திரன், கருடா பாலு, இருகூர் செல்வம், சச்சின் சிவக்குமார், ஆறுமுகம், ஸ்ரீதர், முனுசாமி, காமராஜ், சுலைமான், முஸ்தபா, என்.ஜி.ஆர்.செல்வன், சூரியபிரகாஷ், கிளின்டன், அமீன், சந்தோஷ், மோகன்ராஜ், காமராஜ், சிவபெருமாள், நசீர், முத்துசாமி, மஸ்தான், முனுசாமி, உமாகேஸ்வரி, உமாராணி, லீமா ரோஸ், உஷா, செல்வி, மரகதம்மாள், ராஜேஸ்வரி, விக்னேஷ், கோவை தாமஸ், சிவக்குமார், ஆரோக்கியதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை