மாநகரில் 51 ஏட்டுகளுக்கு எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு

சேலம், ஜூன் 9: தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளில் எந்தவிதமான பிரச்னைகளுமின்றி பணியாற்றியவர்களுக்கு சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகரில் 25ஆண்டுகள் பணி முடித்த 51 பேருக்கு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு வழங்கி கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டுள்ளார். கடந்த 1ம் தேதியே பதவி உயர்வு அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 4ம் தேதி அறிவிக்கப்பட்டதால் ஒரு வாரம் கழித்து நேற்று பதவி உயர்வு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவர்களுக்கு ₹3ஆயிரம் வரை கூடுதலாக சம்பளம் கிடைக்கும்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்