மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம்

 

கோவை, பிப். 14: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர்கள் செல்வசுரபி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

கிழக்கு மண்டலத்தில் 11 மனு, மேற்கு மண்டலத்தில் 4 மனு, வடக்கு மண்டலத்தில் 11 மனு, தெற்கு மண்டலத்தில் 4 மனு, மத்திய மண்டலத்தில் 15 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 9 மனு என மொத்தம் 54 மனுக்களை மேயர் பெற்றுக்கொண்டார். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமில், உதவி கமிஷனர்கள் மாணிக்கம் (கணக்கு), கவிதா (கிழக்கு), சந்தியா (மேற்கு), ஸ்ரீதேவி (வடக்கு), பிரேம் ஆனந்த் (தெற்கு), செந்தில்குமரன் (சென்ட்ரல்), நகரமைப்பு அலுவலர் குமார் மற்றும் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்