மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் தலைவர்): சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு  வராமல், ஆண்டுக்கு 10% வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை  செய்து புதிய அறிவிப்புவெளியிட வேண்டும்.முத்தரசன் (சிபிஐ, மாநில செயலாளர்): தமிழக அரசு நகர்ப்புற சொத்துவரி உயர்வை நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்து, வெகுவாக குறைக்க முன்வர வேண்டும்.கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம், மாநில செயலாளர்): விலை உயர்வு, வேலையின்மை போன்ற பல நெருக்கடிகளால் மக்கள் தவிக்கின்றனர்.  தமிழக அரசு, அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி விகிதாச்சார உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் சொத்து வரியை உயர்த்தாமல், மாற்றுத்திட்டத்தின் மூலம் வருவாயைப் பெருக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அன்புமணி ராமதாஸ்(பாமக இளைஞரணி தலைவர்): சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): கொரோனா பாதிப்புக்கு பிறகு இயல்புநிலை இப்போதுதான் இயல்பு நிலை ஏற்படத்தொடங்கி இருக்கிறது. எனவே, சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சிரமங்களை சந்தித்து வரும் மக்களுக்கு சொத்துவரி உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை