மாநகராட்சி ஊழியருக்கு கமிஷனர் பாராட்டு

 

கோவை, ஆக. 5: கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் லாரியின் டிரைவராக பணியாற்றி வருபவர் அப்துல் ரகுமான். இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் எரிந்து கொண்டு இருந்த கார் மீது தண்ணீரை ஊற்றி சரியான நேரத்தில் அணைத்தார். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி கமிஷனர் பிரதாப், டிரைவர் அப்துல் ரகுமானை நேரில் அழைத்து அவருடைய சேவையை பாராட்டினார். அத்துடன் தனது பாராட்டு கடிதத்தையும் அவரிடம் வழங்கினார். இதனால் டிரைவர் அப்துல் ரகுமான் மகிழ்ச்சி அடைந்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை