கோவை, ஆக. 5: கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் லாரியின் டிரைவராக பணியாற்றி வருபவர் அப்துல் ரகுமான். இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் எரிந்து கொண்டு இருந்த கார் மீது தண்ணீரை ஊற்றி சரியான நேரத்தில் அணைத்தார். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி கமிஷனர் பிரதாப், டிரைவர் அப்துல் ரகுமானை நேரில் அழைத்து அவருடைய சேவையை பாராட்டினார். அத்துடன் தனது பாராட்டு கடிதத்தையும் அவரிடம் வழங்கினார். இதனால் டிரைவர் அப்துல் ரகுமான் மகிழ்ச்சி அடைந்தார்.