Tuesday, September 17, 2024
Home » மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

by Suresh

திருச்சி, செப்.12: ரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (செப்.13) நடைபெற இருப்பதால், நாளை மறுநாள் (செப்.14) ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பில் மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்-III (Aerator) மற்றும் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு ரங்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (செப்.13) நடைபெற இருப்பதால், இந்த நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் பெறும் மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B காலணி, காஜாமலை பழையது, ரெங்கா நகர், சுப்ரமணிய நகர் புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் புதியது, தென்றல் நகர் பழையது, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது, M.K .கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மை வீதி, M.K கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்தர் நகர், LIC புதியது, கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே.கே நகர், அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், T.V.கோவில், உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், புத்தூர் ஆனந்தம் நகர் மற்றும் Rainbow நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் நாளை மறுநாள் (செப்.14) இருக்காது. செப்.15ம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மாநகராட்சிக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

four − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi