மாணவி தூக்கிட்டு தற்கொலை

பவானி, ஜூலை 30: பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகள் ஆர்த்தி (14). பவானியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு டியூசன் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாட்டியும், தம்பியும் இருந்தனர். இந்நிலையில் சமையலறையில் திடீரென ஆர்த்தி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட உறவினர்கள் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து