மாணவிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் போக்சோவில் கைது

 

ஓசூர், ஏப்.29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி ராயல் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மேவால்ட்(57), மத போதகர். அதே பகுதியில், பிளஸ் 2 முடித்து விட்டு, நீட் தேர்விற்கு தயாராகி வந்த 17 வயதான நேபாள நாட்டு மாணவிக்கு, மேவால்ட் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மேவால்ட் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மதபோதகர் மேவால்ட்டை போலீசார் கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை