மாணவிக்கு பாலியல் தொல்லை

 

தர்மபுரி, அக்.27: தர்மபுரி மாவட்டம், சோளக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(21) என்பவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை கண்டு விஜய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபற்றி மாணவியின் தாய், தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள விஜயை தேடி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி