மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

தாம்பரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (23). இவர் வேளச்சேரியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியார் லேபில் வேலை செய்து வந்துள்ளார். இவர், குன்றத்துாரில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சில நாட்கள் பழக்கத்திற்கு பின்னர் மாணவியை காதலிப்பதாக கூறிய சின்னப்பராஜ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து மாணவியின் பெற்றோர்களுக்கு தெரியவர அவர்கள் சம்பவம் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சின்னப்பராஜை கைது செய்தனர்….

Related posts

சுத்தியலால் தலையில் அடித்து 76 வயது மனைவி கொலை: ராணுவத்தில் பணியாற்றிய 84 வயது கணவர் கைது

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபரிடம் கைப்பற்றிய செல்போன்களில் லட்சக்கணக்கான ஆபாச போட்டோ ஆயிரக்கணக்கில் ஆபாச வீடியோ: ஆய்வுக்கு கூடுதலாக நிபுணர்களை நியமிக்க நீதிபதி உத்தரவு

ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்