மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: 3 பேர் அதிரடி கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது மாணவ, தனது வகுப்பு தோழியுடன் அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அழகு நிலைய பொறுப்பாளர் மன்சில் மற்றும் பணியாளர் விக்னேஷ் ஆகியோர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். மாணவியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்சில், தேவகோட்டையை சேர்ந்த விக்னேஷ் (28), மற்றொரு பணியாளர் காரைக்குடியை சேர்ந்த லெட்சுமி (45) மற்றும் இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்த 17 வயது பள்ளி மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின்னர் போலீசார் லெட்சுமி, விக்னேஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  உடந்தையாக இருந்த வகுப்பு தோழியும் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மன்சிலை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது