மாணவிகளை நடனமாட சொல்லி டார்ச்சர் செய்த ஆசிரியர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஈராசிரியர் பள்ளியான இங்கு நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த 39 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு சின்னதுரை(42) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு தாமதமாக 11 மணிக்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. வகுப்பறையில் தனது செல்போனில் பாட்டு போட்டு மாணவிகளை நடனம் ஆடக் கூறினார். மாணவிகள் மறுக்கவே, சில மாணவிகளின் இடுப்பை, கைகளைப் பிடித்துக் கிள்ளினார். அப்போது மாணவிகள், சத்தம் போட்டு வெளியே ஓடினர். மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று, ஆசிரியர் சின்னதுரையை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார் சின்னதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது