மாணவர் தூக்கிட்டு தற்கொலை

 

பழநி, செப்.10: பழநி அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழநி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் நிவாஷ் (19). உடுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி