சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக நேற்று மதியம் மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. இதில், 100க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். அதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நவீன், தனது புத்தகப்பையில் ஜல்லிக்கற்களை வைத்திருந்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதனை தெரிந்த சக மாணவர்கள் நவீனை விடுவிக்ககோரி ஆவடி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். …