மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 

பாலக்காடு, ஜூன் 15: பாலக்காடு மாவட்டம் தச்சநாட்டுக்கரை கிராமப்பஞ்சாயத்தில் மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் லேப்டாப் வழங்கப்பட்டது. தச்சநாட்டுக்கரை கிராமப்பஞ்சாயத்து கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் கே.பி.எம்.சலீம் லேப்டாப் வழங்கினார். துணைத் தலைவர் பீனாமுரளி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து நிர்வாகக்குழு தலைவர் சுபைர், மக்கள் பிரதிநிதிகளான வினோத், இல்லியாஸ், ரமணி, பிந்து, கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆஷிப், துணை செயலாளர் பிரசாந்த்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை