மாணவர்களுக்கு பாலியல் தொல்லை விடுதி கண்காணிப்பாளரும் கைது

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி ஊராட்சி பத்தியாவரத்தில் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இங்கு 112 மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் வார்டனாக உள்ள துரைபாண்டியன்(37) என்பவர், மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாணவர்கள் சைல்டு லைன் ‘1098’ என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கடந்த 12ம் தேதி இரவு துரைபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் விடுதி கண்காணிப்பாளரான பாதிரியார் சகாயராஜ்(53) என்பவர், மாணவர்களை கண்காணிப்பதில் கவனக்குறைவாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது