மாணவர்களுக்கு பாராட்டு விழா

காரைக்குடி, ஜூன் 26:காரைக்குடி அருகே இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரி வரவேற்றார். சாக்கோட்டை ஒன்றியக்குழு முன்னாள் பெருந்தலைவர் சுப.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

இலுப்பைக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசு, முன்னாள் துணைத்தலைவர் ரகுபதி, முன்னாள் தலைமையாசிரியர் சண்முகநாதன், ஆசிரியர் சொக்கலிங்கம், ஓ.சிறுவயல் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் லெமாயூ உள்பட பலர் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற வைஷாலி, 2ம் இடம் பெற்ற லியோதரன், 3மிடம் பெற்ற மனோபாலன், 4ம் இடம் பெற்ற ஞானசபரிஷ், 5ம் இடம் பெற்ற கவுதம் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர் முனீஸ்வரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்