மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர்: விடுதி கண்காணிப்பாளர் மீது வழக்கு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விடுதி கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி ஊராட்சி பத்தியாவரத்தில் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் ‘அன்பு இல்லம்’ என்ற விடுதி உள்ளது. இங்கு 112 மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் வார்டனாக உள்ள தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலபுரத்தை சேர்ந்த துரைபாண்டியன்(37) என்பவர், மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாணவர்கள் சைல்டு லைன் ‘1098’ என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு துரைபாண்டியனிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று துரைபாண்டியனை கைது செய்து ேபாளூர் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விடுதி கண்காணிப்பாளரான பாதிரியார் சகாயராஜ்(53) என்பவர் மீது இன்று  வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

`அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் வாய்ப்பு குவியும்’ எனக்கூறி சாப்ட்வேர் பெண் இன்ஜினியருடன் உல்லாசம்: சினிமா உதவி இயக்குனர் கைது

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

நில உரிமையாளரிடம் அசல் ஆவணம் தர ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தார் கைது