மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

ஓமலூர், செப்.15: ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் அழகிரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அருளானந்தம் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி, வசந்தா குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கலந்துகொண்டு 49 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில், பாமக மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா, வார்டு கவுன்சிலர் பொன்னிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஓமலூர் வேலாசாமி செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, பேரூராட்சி தலைவர் செல்வராணி தலைமை வகித்தார். துணை தலைவர் புஷ்பா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சசிகலா மகேந்திரன், சாந்தி அய்யனார், வெங்கடேஷ், சசி, பெருமாள்சாமி, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில், ஓமலூர் ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர், 77 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினர். இதில், சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் லியாகத்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு