மாணவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்துவதில் மாடு மேய்க்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கொத்தனார் கைது

தா.பழூர், பிப்.28: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் ( 28) கொத்தனார். இவர் பெருமாள்தீயனூரை சேர்ந்த 27 வயது நிரம்பிய திருமணமான ஒரு பெண் அப்பகுதியில் உள்ள ஓடைப்பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக சென்று உள்ளார். அப்பொழுது அங்கு சென்ற கொளஞ்சிநாதன் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்து அந்தப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முயற்சி செய்து உள்ளார். இதனை அறிந்த அந்த பெண் சத்தம் போட்டு கூக்குரலிடவே. அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி சென்று கொளஞ்சி நாதனை சுற்றி வளைத்து பிடித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து கொளஞ்சி நாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு