மாணவன் பலியானது குறித்து விசாரணை

 

சேந்தமங்கலம், டிச.12: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பெரிய பல்லம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் மாதேஸ்வரன்(17). இவர், நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை அவருக்கு தெரியாமலே எடுத்துச்சென்று, அங்குள்ள காலி இடத்தில் ஓட்டி பழகிக் கொண்டிருந்தார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டிராக்டர், திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வண்டியின் அடியில் சிக்கி படுகாயமடைந்த மாதேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டர் உரிமையாளர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை