Tuesday, September 17, 2024
Home » மாடர்ன் உடை பிரச்சனையால் 15 வருட காதல் முடிவுக்கு வந்தது: மனைவியை கொலை செய்த காதல் கணவன்:

மாடர்ன் உடை பிரச்சனையால் 15 வருட காதல் முடிவுக்கு வந்தது: மனைவியை கொலை செய்த காதல் கணவன்:

by kannappan

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனே மனைவியை கொடூரமாக வெட்டி உயிரை பறித்து இருக்கிறார். கொல்லப்பட்டவர் ஜெபா பிரின்சி 31 வயது ஆகிறது 15 வருடங்களுக்கு முன்பு எபினேசர் என்றவரை காதலித்து இருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஜெபா பிரின்சி ஒரே மகள் என்ற காரணத்தினால் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களின் இல்லறறை வாழ்க்கைக்கு சாட்சியாக இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். காதல் திருமணம் என்பதால் எல்லாம் பிரச்சனைகளையும் சகித்துக்கொண்டு இத்தனை காலம் குடும்பம் நடத்தி வந்திருக்கின்றார். ஆனால் ஒரே ஒரு விஷயம் இவர்களுக்குள் ஒத்துப்போகாதது 15 வருட மண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட தொடங்கியிருக்கிறது. மாடர்ன் உடை காரணமாக காதல் மனைவியை கொலை செய்துள்ளார். டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்த எபினேசர் வருமானம் விட்டு வரவு செலவிற்க்கே கரைந்து இருக்கிறது, கணவரின் பாரத்தை குறைக்க நினைத்த ப்ரின்சி சொந்த தொழில் செய்ய முடிவு எடுத்துள்ளார், அதற்க்காக திருவனந்தபுரத்தில் உள்ள பியூட்டி பார்லர் அழகுக்கலை நிபுணர் ஆக சேர்ந்துள்ளார்,ஹோம்லி கேர்ள் ஆக இருந்த ப்ரின்சி உடை அலங்காரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை க்ரூமிங் செய்து மாடர்ன் கேர்ள் ஆக மாறியிருக்கிறார். இத்தனை நாட்கள் வரை மனைவியை மங்களகரமான உடையில் பார்த்து பழகி போன எபினேசர்க்கு ஜெப ப்ரின்ஸின் புதிய அவதாரம் கோவத்தை கிளப்பி இருக்கிறது, மனைவியை கண்டித்து ஜீன்ஸ் லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணியாமல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்டு இருக்கிறார். ஆனால் ஜெப பிரின்சி கணவரின் சொல்பேச்சை கெட்ப்பதாக இல்லை. அதனால் எபினேசர்க்கு மனைவி மீது சந்தேகம் எழ குடும்பத்தில் பிரச்னைகள் வேடிக்க தொடைக்கிருக்கிறது. நாளுக்கு நாள் நடந்து வந்த குடும்ப தகராறால் எபினேசர் மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பம் நடத்த அன்று கொலை திட்டத்தோடு அரிவாளை பைக்கில் பதுக்கியப்படி தயாராக இருந்து இருக்கிறார் எபினேசர. ஜெப பிரின்சியின் தம்பியின் திருமண தொடர்பாக தம்பதி இருவரும் பைக்கில் சென்று இருக்கிறார்கள், அப்போதும் ஜெப பிரின்சி கருப்பு உடை அனிதா லெக்கின்ஸ் டாப்ஸ் உடையை அணிந்து இருக்கிறாள், அதனை காரணமாக வைத்து எபினேசர் பிரச்னையை தொடங்கி இருக்கிறார். பைக்கில் செல்லும் போத கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வெடித்திருக்கிறது. முலைச்சில் கிராமத்தில் உள்ள மணல் கால்வாய் அருகே சென்றதும் பைக்கை நிறுத்தி ஜெப ப்ரின்ஸியை தக்கிருக்கிறார். அதனை தொடர்ந்து பைக்கில் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து இருக்கிறார். மனைவி இறந்து போனதை உறுதி செய்த எபினேசர் அருகில் இருந்த கடைக்கு சென்று விஷம் வாங்கி குடித்து தற்கொலை செய்ய முயன்றிக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெப ப்ரின்சியின் சடலத்தை மிட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இருக்கிறார்கள், எபினேசர் உயிருக்கு போராடிய படி மருத்துவமனையில் சீகிச்சைபெற்று வருகிறார். கணவன் மனைவிக்கு இடையை கொண்ட பிரச்சனையால் உயிர் பறிப்போனது மட்டும் அல்லாமல் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் நெற்கதியாய் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.          …

You may also like

Leave a Comment

19 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi