மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை

சென்னை, ஜூன் 25: பேரவையில் கேள்வி நேரத்தின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில், ‘‘மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 84 ஏக்கர் இடம் இருக்கிறது. இதில் திருமண மண்டபம், வணிக வளாகம் அமைக்க வேண்டும்,’’ என்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறுகின்ற திருமணங்கள், நிதிவசதி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.ஆர்.ராஜா: தாம்பரம் தொகுதியில் உள்ள கற்பக விநாயகர், கந்த பெருமாள், சேலையூர் முத்தாலம்மன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்,’’ என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: கற்பக விநாயகர் கோயிலில் இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்தப்படும். சேலையூர் முத்தாலம்மன் கோயிலுக்கு 2004ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. உபயதாரர் நிதி ரூ.9 லட்சத்தில் ஒரு மாதத்திற்குள் திருப்பணிதொடங்கப்படும்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு