சென்னை: வட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவது தற்போது அதிகரித்துள்ளது. மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி கடந்த ஆண்டு 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இனி, இதுபோன்ற உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாஞ்சா நூலில் பட்டம் விடும் நபர்கள் மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்கும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனாலும், சென்னையில் பல இடங்களில் ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றை போலீஸ் கமிஷனர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், மாஞ்சா நூலில் பட்டம் விடவும் மற்றும் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்யவும் வரும் மே 12ம் தேதி வரை தடை விதித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மீறி யாரேனும் மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலோ அல்லது மாஞ்சா நூல் தயாரித்தாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
மாஞ்சா நூலில் பட்டம் விட மே 12ம் தேதி வரை தடை
previous post