மாஜி ராணுவ வீரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

 

திருச்சி, ஜன.5: மாஜி ராணுவ வீரர்களுக்கு இலவசமாக அளிக்கப்படவுள்ள திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கும் முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டும், முன்னாள் படைவீரர்களின் திறனை ஊக்குவித்திட திறன் மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரா்கள் இத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள விருப்ப மனுவினை துணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், திருச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியானது திருச்சி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முன்னாள் படைவீரா்கள் துணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், திருச்சி மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்