மாஜி அமைச்சர் பாஸ்கரனின் உறவினரான கான்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை: மதுரையில் பரபரப்பு

மதுரை: முன்னாள் அமைச்சரின் உறவினரான, பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், தமறாக்கியை சேர்ந்தவர் சரவணக்குமார் (42) சிவகங்கை மாவட்டத்தில், பொதுப்பணித்துறை பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி (37). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணக்குமார் – சுமதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே ஒத்தவீடு கிராமத்தில் வசித்து வந்தனர். சரவணக்குமார், தினமும் பணிக்காக சிவகங்கை சென்றுவிட்டு மாலையில் ஒத்தவீடு கிராமத்திற்கு வந்துவிடுவார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இருதரப்பு உறவினர்களும் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. குடும்பப் பிரச்னையால் அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்த சரவணக்குமார், விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.நேற்றுகாலை, சரவணக்குமார் தூங்கிய அறையின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுமதி, அருகில் வசித்து வரும் தனது சகோதரருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து கடப்பாரை கம்பியால் கதவை நெம்பி உள்ளே சென்று பார்த்தபோது, சரவணக்குமார் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். தகவலறிந்த கருப்பாயூரணி போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சரின் உறவினரான பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

தஞ்சை அருகே ஏரியில் பயிற்சி விமானம் விழுந்ததா? வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலை

அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்