மாங்காடு அருகே காதல் தோல்வியால் சினிமா உதவி ஒளிப்பதிவாளர் தூக்குப்போட்டு தற்கொலை

குன்றத்தூர்: மாங்காடு அருகே காதல் தோல்வியால் உதவி  சினிமா ஒளிப்பதிவாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விக்னேஷ் (22). சினிமா துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதமாக இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் இவரைவிட்டு விலகிச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காதல் தோல்வியால் விரக்தியடைந்த விக்னேஷ், கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், நேற்று இரவு அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே, நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, விக்னேஷ் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் விரக்தியடைந்து சினிமா உதவி ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்