மழை காலத்துக்கு முன்பே கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

வேதாரண்யம்: கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு மழைக்காலம் துவங்கும் முன்பே வெளிநாட்டு பறவைகள் வந்து குவியத்தொடங்கியது.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். தற்போது மழைக்காலத்தை அறிவிக்கும் விதமாக கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சீசன் துவங்குவதை அறிவுறுத்தும் விதமாக ஆலா பறவைகள் முதலில் வந்துள்ளது. தற்போது சரணாலயத்திற்கு கூழைகிடா, பூ நாரை, கடல்காகம், கடல் ஆலா ரஷ்யாவில் இருந்து செங்கால்நாரை உள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. இப்பகுதியில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியை அறிவிப்பு செய்யும் விதமாக ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஆலா பறவைகளும், அண்டார்டிகாவில் இருந்து வந்துள்ள கடற்காகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது. சீசன் துவங்குவதற்கு முன்பாகவே பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும், சிறு சிறு கூட்டமாக அமர்ந்து இருப்பதையும் பார்ப்பதற்கு கண் கொள்ளாகாட்சியாக அமைந்துள்ளது. இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளது எனவும், பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் இன்னும் இரண்டு வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே