மழை எதிரொலியால் பரிதாபம் பயணிகள் இன்றி ஓடும் நீலகிரி மலை ரயில்

குன்னூர்: தமிழகத்தில் மழை எதிரொலியாக குன்னூர் மலை ரயில் நிலையம் சுற்றுலா பயணிகள் இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது. நூற்றாண்டு பழைமை மலை ரயில் என்பதால்  இதில் பயணிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் இந்த மலை ரயில் பல்வேறு மலைக்குகைகள் வழியே பயணம் செய்கிறது. மலைப்பாதையில் உள்ள இயற்கை வளங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில்  குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான தண்டவாளத்தில் பாறைகள் விழுவதால் வரும் 15ம் தேதி வரை குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின்  வருகை குறைந்துள்ளது. இதனால் குன்னூர்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் சுற்றுலா பயணிகள் இன்றி சென்று வருகிறது. குன்னூர் ரயில் நிலையமும் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….

Related posts

ஆனி மாதத்திலேயே புதுகையில் களைகட்ட துவங்கிய மொய்விருந்து

அதிமுக மாஜி கவுன்சிலர் கொலை திருட்டு ஆடுகளுக்கு பணம் தராததால் வெட்டி கொலை செய்தோம்: கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்; தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: போராட்டம் வலுக்கிறது