மழைநீர் வடிகால் பணி காரணமாக ஈவெரா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மழைநீர் வடிகால் கட்டுமான பணி காரணமாக ஈவெரா சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஈவெரா சாலையில் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் திசையில், பர்னபி சாலை சந்திப்பில் நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் கட்டுமான பணி மேற்கொள்ள உள்ளனர். இதனால், இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை, கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.ஈவெரா சாலையில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பிலிருந்து ஈகா சந்திப்பை நோக்கி நேராக செல்லலாம். ஈவெரா சாலையில் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈவெரா சாலையில் பர்னபி சாலை சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பர்னபி சாலை, பொன்னியம்மன் கோயில் சந்திப்பு, வலது புறம் திரும்பி பிளவர்ஸ் சாலை மற்றும் ஈவெரா சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை