மல்லசமுத்திரம், செப்.4: மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மல்லசமுத்திரம் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. அதே நேரத்தில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.
மழை பெய்தாலும், மறுநாள் அதன் அறிகுறியே தெரியாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று மாலையும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.காய்ந்து வரும் நிலக்கடலை பயிருக்கு இந்த மழையானது உயிரூட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.