மலை கிராமங்களில் இரண்டாவது நாளாக சாராய வேட்டை

ஏற்காடு, ஜூன் 23: ஏற்காடு மலை கிராமங்களில், இரண்டாவது நாளாக போலீசார் தீவிர சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை குண்டூர், தப்பக்காடு வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். இதில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்ஐ மைக்கேல் ஆண்டனி தலைமையில் தனிக்குழுவாகவும் பிரிந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சாராயம் காய்ச்சப்படுவது குறித்து தெரிந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு