மலேசிய துணை முதல்வர் வெள்ளகோவில் வருகை: உறவினர்களை சந்தித்து நலம் விசாரிப்பு

திருப்பூர்: மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான ராமசாமி அவரது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலுக்கு வருகை புரிந்தார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தநாயக்கன்வலசை சேர்ந்தவர் ராமசாமி. 73 வயதான இவர் சிறு வயதிலேயே மலேசியா நாட்டிற்கு சென்றார். அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சியின் துணை பொதுசெயலாளராகவும், அம்மாநில துணை முதல்வராகவும் இருந்து வருகிறார். இவர் நேற்று மாலை அவரது சொந்த ஊரான வெள்ளகோவில், மூத்தநாயக்கன்வலசு பகுதிக்கு வந்தார். பின் அங்குள்ள அவரது உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து அங்கிருந்து புறப்பட்டு கோவை சென்றார். …

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்