மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச பயணி கைது

சென்னை: கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளில் டுலல் சன்ட்ரா (38) என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டில் ஒருவர் வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதை பரிசோதித்தபோது போலி என தெரிந்தது. பின்னர் குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து, ஒன்றிய உளவு பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அவர், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், சர்வதேச போலி பாஸ்போர்ட் கும்பலிடம், பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது. அவரை கைது செய்தனர். பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களது அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கும் தீவிர விசாரணை நடந்து வருகிறது….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது