மறைந்த முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவதாஸ் உருவ படத்திற்கு மலரஞ்சலி: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் மறைந்த முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவதாஸ் உருவ படத்திற்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மலரஞ்சலி செலுத்தினார். திருக்கழுக்குன்றம் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான பெ.தேவதாஸ் கடந்த 6ம் தேதி உடல் நிலை குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், மறைந்த தேவதாசின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக் கொண்டு தேவதாசின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கட்சியினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி பின்னர் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, ஒன்றிய குழு துணை தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் நல்லூர் ஜெயராமன், ஞானபிரகாசம், தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்