மருத்துவ காப்பீடு திட்ட முகாம்

 

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, தேன்மொழி இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினர் புதிய அட்டை பெற விண்ணப்பித்தனர். இம்முகாமினை தொடர்ந்து அடுத்த மாதம் 26ம்தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், விவேகானந்தன், சுரேஷ், சரவணன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி